Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எனது அரசியல் வருகையை விரைவில் அறிவிப்பேன் -திவ்யா சத்யராஜ் விளக்கம்

டிசம்பர் 17, 2020 10:27

சென்னை: அரசியல் கட்சியில் இணைவது நிச்சயம். ஆனால் எந்த கட்சியில் இணைய போகிறேன் என்பதை இன்னும் சில தினங்கள் கழித்தே வெளியிடுவேன் என்று, நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா விளக்கம் அளித்துள்ளார்.
 
பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, கொரோனா காலத்தில் தமிழக மக்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.

மருத்துவத் துறை, நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைரலான இவர், தற்போது விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாய துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தனது மகள் அரசியலுக்கு வந்தால் தன்னுடைய ஆதரவு எப்போதும் இருக்கும் என்று சத்யராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் ‘’என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன்.

ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும், நண்பனாகவும் என் மகளுக்கு பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்’’ என கூறி இருந்தார்.

இதனிடையே திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவ தொடங்கின. இதுகுறித்து திவ்யாவிடம் கேட்டபோது எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து எந்த தகவலையோ அல்லது அறிக்கையையோ இதுவரை எனது தரப்பில் இருந்து வெளியிடவில்லை.

இதுகுறித்த தகவல்கள் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும். ஒரு அப்பாவின் ஆதரவு எப்போதும் மகளுக்கு இருக்கும் என்ற அடிப்படையில்தான் எனது தந்தை அறிக்கை வெளியிட்டார். அதை வைத்து எனது வளர்ச்சிக்காக எனது அப்பாவின் புகழை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்