Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெள்ள அபாயம் இல்லை- மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு

டிசம்பர் 19, 2020 11:14

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ள அபாயம் எதுவும் இல்லை என  மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான, பாபனாசம் அணை தன்னுடைய  முழு கொள்ளளவான, 143 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து,  அணைக்கு வருகிற உபரிநீரானது, வினாடிக்கு  4,680 கன அடி வீதம்,  தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாழ்வான பகுதிகளில் வசித்து வரும்,  ஆற்றங்கரையோர மக்களுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஆனாலும், இம்மாவட்டத்தில், இப்போதைக்கு வெள்ள அபாயம் எதுவும் இல்லை!" என, திருநெல்வேலி  மாவட்ட ஆட்சி தலைவர் வே. விஷ்ணு தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்