Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமையல் எரிவாயு விலை ஏற்றத்திற்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்

டிசம்பர் 19, 2020 11:22

ஈரோடு : மத்திய அரசு அறிவித்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்து எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து  தமிழர் கழகம் கட்சி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் தமிழர் கழகம் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தமிழர் கழகம் கட்சியின் மாவட்டசெயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார்.மேலும் ஆர்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பிரபுதேவா மற்றும் இளந் தமிழர் கழகம் மாவட்டச் செயலாளர் அரங்க.ராஜ்குமார்,மாநகரச் செயலாளர் ராபர்ட் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தமிழ்ச்செல்வன் துணைச் செயலாளர்  கொங்கு.ஆ.பரமசிவன்,மாவட்ட அமைப்பாளர் த.விஜய் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதனை தொடர்ந்து பெட்ரோல் டிசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்ப பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு  எதிர்ப்பு தெரிவித்து எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்