![](admin/uploads/.5d78be8791f411.97753559.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய மருத்துவ வசதி இல்லாமல் உள்ளது. இதனை கண்டித்தும், அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாதததை கண்டித்தும் இந்திய ஜனநாக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் பிரசவ வார்டுகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தக்கோரியும், இலவச ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி தரக்கோரியும், மருத்துவமனை வளாகத்தில் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.