Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் நேரத்தில் எல்லாம் மாறும் - கனிமொழி 

டிசம்பர் 22, 2020 06:32

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார்.

 இதில்  500க்கும் மேற்பட்ட  திமுகவினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா, திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

 இதனை தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் மிகவும் பாதித்து இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் பல முறை கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசு இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை உயர்த்தி உள்ளது. 

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறும் வரையில் தொடர்ந்து போராடுவோம் எனவும்,  தேர்தல் நேரத்தில் எல்லாம் மாறும் என்று நம்புகின்றோம் எனவும்  கனிமொழி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்