Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டார்மங்கலத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் 

டிசம்பர் 22, 2020 06:41

பெரம்பலூர்:  நாட்டார்மங்கலத்தில் கால்நடைகளுக்கு  அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு முகாம்  நடைபெற்றது. 

இதில் பாடாலூர் கால்நடை மருத்துவர் பழனிசாமி கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து கால்நடைகள்  வளர்ப்போர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கினார். இந்த முகாமில் கால்நடை ஆய்வாளர் மணிமுத்து, கால்நடை பராமரிப்பு உதவியாளர் முகமது ரபிக், பால் சொசைட்டி செகரட்டரி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்