Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சர்வேஷ் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழா 

டிசம்பர் 22, 2020 06:45

சென்னை : தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் விழாவை  முன்னிட்டு ஏழை எளிய மக்கள்  ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சென்னை தாம்பரம் சர்வேஷ் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கைவிடப்பட்ட சிறுவர் இல்லத்தில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன் சிறுவர்களுக்கு புத்தாடை வழங்கினார். 

பின்னர் கிருஷ்ணா நகரில் சாலையோரம் வசிப்போர் மற்றும்  கூலி தொழிலாளர்கள்  உள்ளிட்ட சுமார் ஆயிரம் பேருக்கு அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் புத்தாடைகள் வழங்கினார். இதில் அறக்கட்டளை செயலாளர் சரவணன், துணை தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்