Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 ஈரோட்டில் அம்மா கிளினிக் - அமைச்சர் செங்கோட்டையன் துவக்கிவைத்தார்

டிசம்பர் 22, 2020 08:50

ஈரோடு : சுற்று வட்டார பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது.

இதில்  தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து  பணியமர்த்தப்பட்ட ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் ஒரு பல்நோக்கு பணியாளர் உள்ளிட்டோருக்கு முறையாக சிகிச்சையை அளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். 

முன்னதாக நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு ராமலிங்கம், சிவசுப்பிரமணியம் ,வெங்கடாசலம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள்,  பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்