![](admin/uploads/.5c8f43a7b81901.67287265.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஈரோடு: திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி சிறப்பான தொகுதிகளை பெறும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்... தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் விரோத அதிமுக ஆட்சி மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுவதுடன், மத்திய அரசுக்கு அடிமை சாசனத்தை எழுதி கொடுத்து விட்டு அடிமை சேவகம் செய்யும் ஆட்சியாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு வாக்குப்பதிவின் மூலம் தக்க பாடத்தை புகட்டுவார்கள் எனவும், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு என சிறப்பான தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை தங்கள் கட்சிக்கு இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
மேலும் அரசு பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவதை போல, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக மாநில செயற்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் சித்திக், மாவட்ட செயலாளர் சலீம், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆட்டோ ஷாகுல் ஹமீது, மெஹயூப் பாபு, முகம்மது ரஃபிக் ஆகியோர் உள்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.