Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: அம்மா மினி கிளினிக்கை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழக அரசு சார்பில் புதிதாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்கை தமிழக முதல்வர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து இன்று திருச்சி, சங்கிலியாண்டபுரம், சுப்பையா தெரு மற்றும் தென்னூர் பகுதியில் மினி கிளினிக்கை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், நகர்நல அலுவலர் யாழினி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.