![](admin/uploads/.5ea91d63938c54.17344399.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பாலாற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நடுபட்டரை பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் இயற்கை உபாதை கழிக்க வெளியில் சென்றுள்ளார். அப்போது பாலாற்று நீரில் இரங்க முற்படும் போது கால் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கியுள்ளார்.
உடனடியாக அப்பகுதி மக்கள் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கியுள்ள ராஜனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 9 அடிக்கு மேலாக தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் சிக்கிய அவரை மீட்க முடியாமல் 3 மணி நேரம் போராடி பின்னர் அவரை சடலமாக மீட்டனர்.
பின்னர் சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.