Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராணிப்பேட்டை: மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா முதல்நாள் நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் செம்மல் விருது பெற்ற ராணிப்பேட்டை தமிழ் சங்கத்தின் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான தமிழ் செம்மல் த. தினகரன் அவர்களை ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாராட்டி வாழ்த்தி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ. ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் ப. ராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.