Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி விசிக சார்பில் பெரியார் நினைவு தினம்

டிசம்பர் 24, 2020 10:24

திருச்சி: பெரியார் நினைவு தினத்தையொட்டி திருச்சியில் விசிக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பெரியார் நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் அனைத்து கட்சி  சார்பிலும் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. 

இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து அருகில் உள்ள பெரியாரின் திருஉருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச்செயலாளர் நா.பிரபாகரன் ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் ஜே.தங்கதுரை, மாநில துணைச்செயலாளர் அரசு ,பாராளுமன்ற செயலாளர் தமிழாதன், மாவட்ட துணைச்செயலாளர் புல்லட் லாரன்ஸ், தொகுதி செயலாளர்கள் கணியமுதன், ஏகலைவன், முசிறி கலை, பகுதி செயலாளர் ஆல்பர்ட் ராஜ், தொழிலாளர் விடுதலை முன்ணனி மாவட்ட செயலாளர் செல்வ குமார் ,முன்னாள் தொகுதி செயலாளர் பாலசந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்