Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் மையத்தை அறநிலை துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த புதுப்பாளையம் தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் மையம் திறப்பு விழா காரப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுபத்ரா தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று எம்ஜிஆர் அம்மா ஆகியோர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து பின் குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றி கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழக அரசின் விலையில்லா அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
மேலும் இதனை தொடர்ந்து சேந்தமங்கலம் ஊராட்சியில் உள்ள இளைஞர்கள் கலசப்பாக்கம் அதிமுக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கை அடிப்படையில் 24 மணி நேரத்தில் விளையாட்டு உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்தார்.
மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா, உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், செவிலியர்கள், மருந்தாளர், மருத்துவ பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.