Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடகம் நடத்துவது தான் திமுகவின் வேலை: அமைச்சர் சி.வி.சண்முகம்

டிசம்பர் 29, 2020 08:44

கள்ளக்குறிச்சி: ஆட்சியில் இருக்கும் போது மக்கள் விரோத செயல் செய்வது, ஆட்சியில் இல்லாத போது மக்களுக்கான செயல் செய்வது என  மிகப்பெரிய நாடகம் நடத்துவது தான் திமுகவின் வேலை என கள்ளக்குறிச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார்.

அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம்  கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில் திமுக ஆட்சிக்கு வந்தால் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் சாதரணமாக நடக்கும் என்றும், திமுக அழிக்கப்பட வேண்டும் என்றால் இது தான் சரியான தேர்தல் என்றும், இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் திமுக அழிக்கப்படுவது உறுதி என்றும் தெரிவித்தார்.

 ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும், நீட் தேர்வையும் கொண்டு வந்தது திமுக தான் என்றும், ஆட்சியில் இருக்கும்போது மக்கள் விரோத செயல், ஆட்சியில் இல்லாத போது மக்களுக்கான செயல் என மிகப்பெரிய நாடகம் நடத்துவது தான் திமுக என்றும்தெரிவித்தார். 
இக்கூட்டத்தில்  அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர் ப.மோகன், கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் குமரகுரு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்