Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி - அமைச்சர் .ஓ .எஸ். மணியன் துவக்கி வைத்தார்

டிசம்பர் 31, 2020 11:54

நாகை : குரவப்புலத்தில்  மாநில அளவிலான கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி. அமைச்சர் .ஓ .எஸ். மணியன் துவக்கிவைத்தார் . நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த குரவப்புலத்தில் மூன்றாவது மாநில அளவிலான திறந்த நிலை கராத்தே சாம்பியன் ஷிப், மற்றும் 2020-ம் ஆண்டுக்கான கராத்தே கட்டா சிலம்பம் யோகா துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட தற்;காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது.

இதில்  11 மாவட்டங்களிலிருந்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 550 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கராத்தே மற்றும் போட்டியில் 6 வயது முதல் 23 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் போட்டியை கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் துவக்கி வைத்தார். போட்டியில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள், சுழற் கோப்பைகள் வழங்கப்பட்டது

தலைப்புச்செய்திகள்