Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புத்தாண்டையொட்டி தூத்துக்குடி சிவன் கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்

ஜனவரி 01, 2021 09:52

தூத்துக்குடி :புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பழமை வாய்ந்த  சிவன் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று   பக்தர்கள் சாமி  தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சங்கரராமேஸ்வரர் என அழைக்கப்படும் சிவன் கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.  இதில் பொதுமக்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் முடங்கியுள்ளதால் 2021 ஆம் ஆண்டு செல்வ செழிப்போடு இருக்க வேண்டி  சுவாமி தரிசனம் செய்ய வந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். புத்தாண்டையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்