![](admin/uploads/.5eabb655b82a94.32231289.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: கலைஞர் அறிவாலயத்தில் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி உள்ளிட்ட 13 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கே.என்.நேரு கூறும்போது வரும் சட்டமன்ற தேர்தலில் தகவல் தொழில் நுட்ப அணியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும், ஸ்டாலின் அவர்களை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள்
சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் சுப்பிரமணி, தமிழ், பொன்னி இசை, அருண் டிஜிட்டல் ரமேஷ், ராஜ்குமார், லட்சுமன் திலீபன், சூர்யா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.