![](admin/uploads/.6482c86c52b7b9.43646697.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரை சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரிலிருந்த 8 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் துறைமுகத்திலிருந்து ஒரு காரில் இரண்டு இளைஞர்கள் தூத்துக்குடி நோக்கி வந்துள்ளனர். அப்போது சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த அஸ்வின் குடும்பத்தினர் ஒரு காரில் டிரைவர் திருச்செந்தூர் காணம் என்ற கிராமத்தை நோக்கி சென்றனர்.
காரை பொன்னுசாமி என்பவர் ஓட்டிவந்துள்ளார். கார் கடற்கரை சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 8 பேர் படுகாயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.