![](admin/uploads/.5d60e0b2b1d864.04692744.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே ஆடுகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்குகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தேவேந்திரன். இவர் வயல்வெளியில் ஆட்டுக்கிடாய் அமைத்து, ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் இரவு ஆடுகளை மேய்த்து விட்டு பின்னர் பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார். நேற்று இரவு ஆடுகள் கட்டியிருந்த ஆட்டுப்பட்டியில் புகுந்த மர்ம விலங்குகள் அங்கிருந்த 21 ஆடுகளை கடித்ததில் 17 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் 4 ஆடுகள் பலத்த படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறது.
இச்சம்பவம் குறித்து விரைந்து வந்த கால் நடை மருத்துவர்கள் மோசமான நிலையில் உள்ள ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சின்னசேலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனியாமூரில் ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்குகளால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.