Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மடப்புரம் கோவிலில் மார்கழி மாத குத்து விளக்கு பூஜை

ஜனவரி 03, 2021 10:37

நெல்லை : வள்ளியூர் அருகே உள்ள மடப்புரம் பெருமாள் கோவிலில் மார்கழி மாத குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.
மாதங்களில் நான் மார்கழி என்றார் கிருஷ்ண பகவான். அந்த அளவிற்கு மார்கழி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. மார்கழி மாதத்தில்  அதிகாலை பொழுதில் திருவிளக்கு ஏற்றி வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
இதனையொட்டி நெல்லை மாவட்டம் மடப்புரம் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதங்களில் அதிகாலையில் பக்தர்கள் திருப்பாவை பாடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு  மார்கழி மாதத்தின் 19 ம் நாளான இன்று பெண்கள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. 

இதில் பெண்கள் குத்து விளக்கு பாடல்களை பாடி திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர். பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் திருக்கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. 

தலைப்புச்செய்திகள்