Wednesday, 16th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பள்ளி மாணவர்களுக்கான  நீட் பயிற்சி திட்டம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்

ஜனவரி 04, 2021 09:45

நாகை: நாகை மாவட்டம் தகட்டூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கான  நீட் பயிற்சி திட்டத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் ரோட்டரி சங்கம் சார்பில் நூறு அரசு பள்ளி மாணவர்களை மருத்துவராக்கும் நீட் பயிற்சி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
 
நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பிற்கு தயாராக்கும் இந்த  நீட் பயிற்சி  திட்டத்திற்கான அறிக்கையை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெளியிட்டு நீட் பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைவர் பிரின்ஸ் கோபால் ராஜா, பாலாஜி பாபு, கூடுதல் ஆட்சியர் பிரசாந், அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், ஒன்றிய குழு தலைவர்  கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், பெலிக்ஸ் சுந்தர் ராமசாமி, இலக்குவன் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்