Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மன்னார்குடியில் பொங்கல் பரிசு திட்டம் - அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்

ஜனவரி 04, 2021 09:56

திருவாரூர்: மன்னார்குடியில் தமிழக அரசு வழங்க கூடிய பொங்கல் பரிசு அடங்கிய தொகுப்பு வழங்கும்  திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்ட துவக்க விழா நடைபெற்றது.

பந்தலடியில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை  அங்காடியில்  நடைபெற்ற விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு  அரிசி , கரும்பு உள்ளிட்ட ரூ.2500 அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு  தொகுப்பு திட்டத்தினை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

இதில்  மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் , கோட்டாட்சியர் புண்ணியக் கோட்டி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் , முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவராஜமாணிக்கம், சுதா ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்