Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் பரிசுத்திட்டம் - அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார் 

ஜனவரி 04, 2021 10:12

திருவள்ளூர் : மதுரவாயலில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகளை ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை  கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க பட்டு வருகின்றது.


அந்த வகையில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் குடும்ப அட்டைதாரர் ஒவ்வொருவருக்கும் 2500 ரூபாய்  பணம் உட்பட பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார்.
 
மதுரவாயல் தொகுதியில் உள்ள 50000த்திற்கும் மேற்பட்ட பயனாளிகளில் முதற்கட்டமாக ஆலப்பாக்கம் ரேஷன் கடையில் 1520 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 2500 ரொக்கம் பணம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் சுமார் 1 லட்சம் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதேபோல் பூவிருந்தவல்லி, ஆவடி, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்