Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் பரிசு தொகுப்பு - திருச்சியில் அமைச்சர்கள் வழங்கினர் 

ஜனவரி 04, 2021 10:15

திருச்சி : குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் கூடிய ரூபாய் 2500 வழங்கும் திட்டத்தை   அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தொகுப்புடன் கூடிய ரூபாய் 2500 வழங்கப்படும் என   தமிழக முதல்வர் அறிவித்தார். 

அதனடிப்படையில் இந்த திட்ட துவக்க விழா திருச்சி சிந்தாமணி சிறப்பு அங்காடியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்ட    நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் பயனாளிகளுக்கு  சிறப்பு தொகுப்புடன்  ரூபாய் 2500 ரொக்க தொகையை வழங்கினர்.
  
இந்த சிறப்பு தொகுப்பு மூலம்  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ  சர்க்கரை,  20 கிராம் முந்திரிப்பருப்பு, 20 கிராம் திராட்சை, 5கிராம் ஏலக்காய் மற்றும் முழு கரும்பு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்