Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சொத்து தகராறு - பெண் தற்கொலை முயற்சி 

ஜனவரி 05, 2021 05:48

கிருஷ்ணகிரி : நிலப் பிரச்சனையை தீர்த்து வைக்க கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள பசவண்ணகோயில்  பகுதியை சேர்ந்தவர் சம்பங்கி. இவருக்கும், இவரது பக்கத்து நிலத்துக்காரருக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலப் பிரச்சனை இருந்து வருகிறது.இதுதொடர்பாக கந்திகுப்பம் காவல் நிலையத்தில் சம்பங்கி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து  போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த சம்பங்கி, இது தொடர்பாக மனு அளிப்பதற்காக  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த  மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.  அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை மீட்டனர். 

நிலப் பிரச்சனை தொடர்பாக பெண்  ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்