![](admin/uploads/.5e8c1f46f37c57.95283823.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராமநாதபுரம் : தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் குடும்பங்கள் 449 உள்பட 3 லட்சத்து 73 ஆயிரத்து 325 குடும்ப அட்டைத்தார்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று துவக்கி வைத்தார்.
இம்மாவட்டத்தில் உள்ள 775 நியாய விலை கடைகளில் 93 கோடியே 33 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மணிகண்டன் முன்னிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்ல் பரிசு தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார்.
இதில் வட்டாட்சியர் முருகவேல், 12 வது வார்டு அதிமுக செயலாளர் முனியசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.