Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கதினர்  மனு கொடுக்கும் போராட்டம் 

ஜனவரி 05, 2021 05:54

கடலூர் : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சார்பில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிமனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சார்பில் நிவர் மற்றும்  புரெவி புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வேலை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்,இடிந்த வீடுகளுக்கு மாற்றாக பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பயிர் வகைகளை முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும், 

மழையால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளிட்டவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்