Sunday, 29th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி : இரட்டை சான்றிதழ் முறையை நிறுத்தி, ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் அமைச்சர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள 68 சமூகத்தை சேர்ந்த சீர்மரபினருக்கு இரட்டை சான்றிதழ் முறையை நிறுத்தி, ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் உள்ள அமைச்சர் வளர்மதி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் முத்திரையர் அரசியல் கள மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.எம் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.