Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓவுதியம் கிடைக்காததால் தமிழாசிரியர் குடும்பத்துடன் உண்ணாவிரதம் 

ஜனவரி 05, 2021 01:47

தூத்துக்குடி : பணி ஓய்வு பெற்று ஓராண்டாகியும் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன் கிடைக்காததால் விரக்தியடைந்த தமிழாசிரியர் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள பாலகிருஷ்ணன் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றவர் என கூறப்படுகிறது.


இந்நிலையில்  இவர் ஓய்வு பெற்று ஓராண்டாகியும் மாவட்ட கல்வித்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் இவருக்கு ஓய்வு ஊதியம் மற்றும் பண பலன்களை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக தமிழாசிரியர் பாலகிருஷ்ணன் பலமுறை கல்வித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதனால் மனமுடைந்த ஆசிரியர் பாலகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு தனது சங்க நிர்வாகிகளுடன் வந்து மனு அளித்தார். அதில் மாவட்ட நிர்வாகம் தனக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பணம்  சுமார் 40 லட்சத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று தனது குடும்பத்தினருடன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்