Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அழகிரி கூறியது போல போஸ்டர்களில் மட்டும் ஸ்டாலின் முதல்வர் ஆகலாம் - ஜி கே வாசன் 

ஜனவரி 05, 2021 02:01

திருச்சி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 2021 ஆம் சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்  திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமையில் நடைபெற்றது.திருச்சி, கரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இணைந்து மண்டல அளவிலான கூட்டம் நடைபெற்று வருகிறது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் களப் பணிகள் தொடங்குவதற்கும் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி உள்ள மொத்த இடங்கள் எண்ணிக்கைகள் குறித்து பேசுவதற்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.

மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மாநில அளவிலான நிர்வாகிகள் வார்டு தேர்தல் நிலவரம் குறித்து அறிந்து விவரித்துள்ளோம். கூட்டணி கட்சிகளுடைய  செயல்பாடு குறித்தும் எதிர்கட்சி அவருடைய செயல்பாடு குறித்தும் கலந்து ஆலோசித்து வருகிறோம். தேர்தல் நெருங்கும் போது படிப்படியாக செய்யக்கூடிய பணிகள் குறித்து விவாதித்து இருக்கிறோம்.

தேர்தல் களத்தில் கூட்டணியை உறுதி செய்வது குறித்து முடிவு எடுத்திருக்கிறார்கள். சட்டமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்ற உறுதியான நிலையை எடுத்து இருக்கிறோம்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும்சின்னப் பிரச்சினை என்றாலே அது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணியில் தான் ஏற்படும்.

மண்டல கூட்டத்தில் ஒரு ஆய்வு முடிந்த பிறகு மாவட்டத் தலைவர்களுடன் இருந்து பேசி அவர்களுடன் பிறகு பரிந்துரைகளை கொண்டு அதன் உண்மை நிலையை அறிந்து களநிலவரம் அறிந்த பிறகு தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியோடு பேச உள்ளோம். உடல்நிலை சரியில்லை என்பது எல்லோருக்குமானது தான் ரஜினிக்கு உடல்நிலை சரியாகி நீண்ட நாள் வாழ வாழ வேண்டும், நல்லவர்களுக்கு அவர் குரல் கொடுக்க வேண்டும் என்பது  என்னுடைய விருப்பமும் கூட. தென்மாவட்டம் முழுவதும் அழகிரி உயர்ந்த பொறுப்பில் இருந்து இருக்கிறார். 

அவருடைய வார்த்தையின்படி ஸ்டாலின் முதல்வராக மாட்டார் வெறும் போஸ்டரில் மட்டும் தான் அவர்களால் முதல்வர் என்ற பெயரை பயன்படுத்த முடியும் என்று கூறியிருப்பது அவருடைய கருத்து. தேர்தலை சரியாகவும் முறையாகவும் மக்கள் நலன் கருதி இந்தத் தேர்தலை நடத்த வேண்டும்.

கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவில் வரும் நிலையில் இதில் எதிர்க்கட்சிகள் ஒருபோதும் எதிர்ப்போ வேறு பிரச்சனைகளையோ கிளப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். விவசாயிகள் விழித்துக்கொள்ள வேண்டும் 7ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.  

விவசாய திட்டத்திற்கு விவசாயிகள் தங்களை உறுதிப்படுத்தி தரவேண்டும். பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய இந்த சட்டத்தினை விவசாயிகள் சிந்தித்து செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் உடைய பேச்சைக்கேட்டு விவசாயிகள் உங்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்