Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

62 வயது மூதாட்டியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்த 16வயது சிறுவன் கைது 

ஜனவரி 06, 2021 04:46

திருச்சி, ஜன. 5  : மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் வீட்டில் தனியாக வசித்து வந்த 62 வயது மூதாட்டி கொலை வழக்கில் அதே பகுதியினை சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி சந்தை பேட்டையில் கணவரை இழந்து தனியாக வசித்து வந்த அப்துல்ரசாக் மனைவி ஹபிபாபீவி(62). இவர் வெள்ளிக்கிழமை இரத்த வெள்ளத்தில் ஆடைகள் முற்றிலும் களைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 


அதனைத்தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் தலைமையில் மோப்ப நாய் ஸ்பார்க் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.  மோப்பா நாய் அதே பகுதியினை சுற்றிவந்து மூதாட்டியின் வீட்டின் அருகேயே நின்றுவிட்டது. இதனால் கொலையாளி அதே பகுதியினை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை சேகரித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 


இதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மூதாட்டி வீட்டின் அருகே வசித்து வரும் 16 வயது சிறுவனை ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையம் அழைத்து மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுவன் தன்னை மூதாட்டி அடிக்கடி திட்டுவதாகவும், இதனால் ஆத்திரமடைந்து வந்த நிலையில், 


சம்பவதன்று மூதாட்டியின் வீட்டின் கதவு திறந்து இருந்ததால் உள்ளே சென்றதாகவும், மூதாட்டியினை பாலியியல் வன்கொடுமை செய்ததாகவும், பின் கழுத்தில் நைலான கயிறு கட்டி இறுக்கி கொலை செய்து, கருங்கற்களை கொண்டு முகத்தை சிதைத்தாகவும் ஒப்புக்கொண்டான். 

மேலும் மூதாட்டியின் 3 சவரன் செயின் மற்றும் செல்லிடைப்பேசியினை எடுத்து சென்றதாகவும் சிறுவன் ஒப்புக்கொண்டதையடுத்து வன்கொடுமை, கொலை, திருட்டு ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சிறுவனை கைது செய்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்