Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி எஸ் டி பி ஐ கட்சியினர் போராட்டம் -கைது செய்த காவல் துறையினர் 

ஜனவரி 06, 2021 04:53

திருச்சி , ஜன .05 : வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியினர்  கைது செய்யப்பட்டனர்.விவசாயிகளின் விரோதன் மோடி என்கின்ற முழக்கத்துடன் SDPI கட்சியின் சார்பில் தேசம் முழுவதும் டிச.26 முதல் ஜன.05 வரை மாபெரும் போராட்ட இயக்கம் நடைபெற்று வருகிறது.

 
அதனடிப்படையில் திருச்சி மாவட்டம் SDPI கட்சியின் சார்பாக கடந்த 10 நாட்களாக திருச்சி மாவட்டம் முழுவதும் கிட்டதட்ட 40 இடங்களுக்கு மேலாக தெருமுனை பிரச்சார கூட்டங்களும்,நோட்டிஸ் பிரச்சாரங்களும், போஸ்டர் பிரச்சாரமும்  நடைப்பெற்றது. இந்த பிரச்சார இயக்கத்தின் இறுதி நிகழ்ச்சியாக இன்று  திருச்சி  பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் மாவட்ட தலைவர்  ஹஸ்ஸான்  தலைமையில் நடைபெற்றது.


 இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை  எழுப்பியவாறு பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 150 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்