Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ கட்சி  ஆர்ப்பாட்டம்

ஜனவரி 06, 2021 11:42

திருநெல்வேலி :சேரன்மகாதேவியில்  விவசாயிகளுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில்,   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசின் புதிய வேளாண் திட்டங்களை எதிர்த்து, கடந்த ஒரு மாத காலமாக, புதுடெல்லியில், பல்வேறு மாநிலங்களை சார்ந்த, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த  தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும்,  புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், திருநெல்வேலி  மாவட்டம் சேரன்மகாதேவி பேருந்து நிறுத்தம் அருகில், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நகரத் தலைவர் சிந்தா கொடி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஒரு மாத காலமாக டெல்லியில் போராடி வரும்,  விவசாயிகளுக்கு ஆதரவாக, மத்திய அரசைக்கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ.கட்சியின், திருநெல்வேலி  புறநகர் மாவட்டத்தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான், மாவட்டச்செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பால் மைதீன்,

சேரன்மகாதேவி  தொகுதித்தலைவர் சேரை அபுபக்கர், செயலாளர் ஜெயலானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின், மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்வர் முகைதீன், நாம் தமிழர் கட்சியின்  மேற்கு மாவட்டத் தலைவர் பீர் முகம்மது ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், சேரன்மகாதேவி  நகர தி.மு.க. செயலாளர் மணிஷா  செல்வராஜ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  ஒன்றியச் செயலாளர் தெய்வநாயகம், லட்சிய ஜனநாயக் கட்சி நிறுவனர் தலைவர் நெல்லை ஜீவா உட்பட, விடுதலை சிறுத்தைகள்  மக்கள் தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும்,  விவசாய சங்கப் பிரதிநிதிகளும், கலந்து கொண்டு, தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்