Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கணிணி - கமல்ஹாசன் அறிவிப்பு 

ஜனவரி 06, 2021 12:19

கிருஷ்ணகிரி: மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கணிணி வழங்கப்படும் என கிருஷ்ணகிரியில் கமலஹாசன் மேற்கொண்ட பரப்புரையில் தெரிவித்தார்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் கிருஷ்ணகிரி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது  சூளகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் தமிழகத்தை சீரமைப்போம் என்ற குரலுடன் இன்றைய தினம் இங்கு வந்துள்ளோம்.

 
என்னுடன் வந்துள்ள முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு கிருஷ்ணகிரியில் ஏற்கனவே பணியாற்றி உள்ளார்.  அரசு ஊழியராக உங்களிடத்தில் பணியாற்றிய அவர் இப்போது மக்கள் ஊழியம் செய்ய வந்துள்ளார் என்றார்.  கோடை காலத்தில் இந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அது இன்னும் தீர்க்கப்படவில்லை. இங்குள்ள மலைவாழ் மக்கள் மேம்பட வேண்டும். கற்கால மனிதர்கள் இந்த பகுதியில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், சான்றுகள் சிதைந்துள்ளன. 


அதை பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது என்றார்.  சினிமாகாரனை பார்க்க மக்கள் கூட்டம் வரும் என்று சிலர் கூறுகிறார்கள். இங்கிருக்கும் நீங்கள் படம் பிடித்து அதை காட்டுங்கள்.  இது மக்கள் கூட்டம் அல்ல. தமிழ்நாட்டை மாற்ற வந்த கூட்டம். மக்கள் நீதிமய்யம் ஆட்சிக்கு வந்தால் நல்ல பல திட்டங்கள் வரும். புதிய அரசியல் மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டார்கள்.

 
தமிழ்நாட்டை சீரமைக்க வந்துள்ள கூட்டம் இது என்றார். வறுமை கோட்டிற்கு கீழ் ஏராளமான மக்கள் உள்ளனர். அவர்களை செழுமை கோட்டிற்கு மேல் கொண்டு வர வேண்டும்.  படித்து வேலை இன்றி இளைஞர்கள் பலர் உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படித்த இளைஞர்கள் பிறருக்கு வேலை கொடுக்க வேண்டிய அளவுக்கு வாழ்க்கை தரம் உயரும் எனவும் தெரிவித்தார். 


நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறு நகரங்கள், கூடி பெரு நகரங்களுக்கு இணையான வசதிகள் அனைத்தையும் பெறும். வீட்டிற்கு ஒரு கணிணி வழங்குவோம்.  அவை உங்களின் உரிமைகள். அதை நிறைவேற்ற வேண்டியது நல்ல அரசின் கடமை.மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால்இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்