![](admin/uploads/.5ea143ee3b1378.26904288.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை : பழைய மகாபலிபுரசாலை, கந்தஞ்சாவடியில், புராணி டூல்ஸ் சென்டரில் வேலை செய்து வரும் வட மாநிலத்தை சேர்ந்த பெரு(35), மற்றும் பிங்கு(22) என்பவர்கள் தங்களது கடைக்கு அருகில் மழை நீர் தேங்கியதை மோட்டார் மூல அகற்ற தயார் செய்து விட்டு சுவிட்ச் போட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதில் இருவரும் மயக்க நிலைக்கு சென்றனர் அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த
மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறியதின் பேரில் பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி.மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து தரமணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததால் கடை மூடப்பட்டது