Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சிஐடியூ வினர் போராட்டம்

ஜனவரி 06, 2021 12:40

கடலூர்  :வேளாண் சட்டம் மின்சார சட்டம் உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சிஐடியூ வினர் போராட்டம் நடத்தினர்.கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகம் முன்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்  சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் மின்சார சட்ட மசோதா,

 
தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்டவைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி  சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த  வடலூர் காவல்துறையினர் போராட்டத்தை கைவிட கோரியும் கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை வடலூர் போலீசார் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்