![](admin/uploads/.629a201c07c5a2.23984333.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கடலூர் :என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை கேட்டு போராட்டம் நடத்திய பயிற்சி தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஐடிஐ முடித்து பயிற்சி முடித்தவர்கள் வேலை கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பயிற்சி முடித்த 200க்கும் மேற்பட்டோர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சிஐடியூ அலுவலகத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் போராட்டம் நடத்துவதற்காக ஊர்வலமாக சென்றனர்.
அப்போது அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துவதாக நெய்வேலி காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் ஐடிஐ யில் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக தொழிற்சங்கங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.