![](admin/uploads/.61b82f0386b485.52525755.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி : சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு சுகாதாரத் துறை பணியாளர் ஊழியர்கள் இன்று வேட்டி அணிந்து வந்து வேட்டி தினத்தை கொண்டாடினர்.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் வேஷ்டி அணிந்து வந்து தங்கள் பணிகளில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள சுகாதார துறை பணியாளர் இன்று முழுவதுமாக வேஷ்டி அணிந்து வந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இன்று வேஷ்டி கட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.