![](admin/uploads/.5cc03ed0ef70c5.20147739.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேனி :கடந்த 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் அடிப்படை மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ரூபாய் 433.86 கோடி செலவிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற
இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய குழு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் குடிநீர்,
வடிகால், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் கிராமத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் நிதி நிலை இருப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.