Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறுமியை சீண்டியவர் சிறையில் அடைப்பு

ஜனவரி 07, 2021 09:22

திருச்சி  : லால்குடி அருகே சிறுமியிடம் சில்மிசம் செய்து தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி பகுதியைச் சேர்ந்த சற்றே புரிதல் திறன் குறைபாடுள்ள 12 வயது சிறுமி,   சோமரசம்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளியில் சிறுமி 5 ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 1 ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அதேப் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் சீண்டினார். இதை பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் லால்குடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பழனியம்மார் மற்றும் போலீசார் அசோக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். 


இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை பகுதியில் அசோக்குமார் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார் அசோக்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி துறையூர் கிளை சிறையில் அவரை அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்