![](admin/uploads/.5f730de219f106.34465205.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி : தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் சலவைத் தொழிலாளர்களுக்கு இரண்டு சட்டமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டுமென தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை சார்பில் வரும் 2021 சட்டமன்ற பேரவை தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் தூத்துக்குடி தாளமுத்து நகரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தூத்துக்குடி தாளமுத்து நகரில் சலவைத் தொழிலாளர்கள் நடத்தப்படும் பள்ளியை அரசு உதவிபெறும் பள்ளியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் வேலையின்றி தவித்த சலவைத் தொழிலாளர்களுக்கு
ஊக்கத்தொகையாக 5000 வழங்க வேண்டும், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியினர் சலவைத் தொழிலாளர்களுக்கு இரண்டு சட்டமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் இல்லை என்றால் 234 சட்டமன்ற தொகுதியிலும் நாங்கள் போட்டியிடுவோம் என மாநிலத் தலைவர் முத்துகுமார் தெரிவித்தார்.