![](admin/uploads/.5e5393dbe38b12.72922138.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தூத்துக்குடி : பாஜக மேலிடம் அறிவிக்கும் தொகுதியில் போட்டியிட தயாராக இருப்பதாக தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள கின்ஸ் பயிற்சி அகடமி சார்பில் கந்தசஷ்டி முழுமையாக பாடும் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற சுமார் 100- மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்திற்கு அமித்ஷா வருகை என்பது கூட்டணி சம்பந்தமாக இல்லை தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதர்ப்பதற்க்காக என தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழகத்தில் 37-தொகுதிகளில் நிற்கப்போவதாக சமூக வளைதளங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மையல்ல என்றும், அதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் சமந்தம் இல்லை எனவும் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் எத்தனை தொகுதி வேண்டும் என கேட்பது மற்றும் வேட்பாளர் தேர்வு செய்யும் தகுதி யாருக்கும் கிடையாது என்றும், இறுதி முடிவு எடுப்பது பாஜக மேலிடம் மட்டுமே என்றார். மேலும் பாரதிய ஜனதா கட்சி தலைமை சொல்லும் தொகுதியில் நான் போட்டியிட தயார் எனவும், அமைச்சர் கடம்பூர் ராஜூ போன்றோர்கள் சொல்லும் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை ஏனென்றால் அவரை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றார்.
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி வலுவாக உள்ளது என்றும், பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் போலீஸ் அதிகாரி என்ற முறையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல். சிபிஐ நேர்மையாக விசாரணை நடத்தி வருகிறது என்றார்