![](admin/uploads/.63ca801948f9a0.36934496.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஈரோடு : பொய் கூறுவதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நோபால் பரிசே வழங்கலாம் என ஈரோட்டில் தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் திருஉருவசிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுமக்களிடம் திறந்த வேனில் தேர்தல் பிரச்சாரபரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் போது இந்தியாவிலேயே சட்டம் பேணிக்காப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்படுகிறது. அதிமுகவில் யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் திமுக தலைவர் அப்படி அல்ல தனது கட்சிக்காரர் தவறு செய்தால் அப்படியே மூடிமறைக்க முயல்வார்.
ஆனால் அம்மாவின் அரசு சட்டப்படி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பிறந்த சிறுபான்மை, மற்றும் பெரும்பான்மை மக்களாக இருந்தாலும் முழு பாதுகாப்பு அளித்து வருகிறது. ஸ்டாலின் அவர்களுக்கு சிந்தித்து பேசுகின்ற சத்தி இல்லை ஒவ்வொரு திட்டத்தையும் சிந்தித்து செயல்படுத்துகிறோம், அதனால் வெற்றி கிட்டுகிறது.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பொய் கூறுவதில் நோபல் பரிசு வழங்கினால் மிகப் பொருத்தமாக இருக்கும், இரவு பகல் பார்க்கமால் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசாக அதிமுக அரசு உள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் பள்ளித் கல்வித் துறை அமைச்சர் .ஏ.செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி, சுற்று சூழல்துறையின் அமைச்சர் கே.சி.கருப்பணன், மாவட்டச்செயலாளர் கே.வி.ராமலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.