Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி : 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பேரணியாக வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கு 20சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், வருவாய் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் பட்டாளி மக்கள் கட்சியில் சார்பில் நீதிமன்றம்
அருகிலுள்ள வஉசி சிலையில் இருந்து மாநில துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் கிழக்கு மாவட்ட மாநில துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ் முன்னிலையில் மாநில வன்னியர் செயலாளர் வைத்தி உட்பட 100க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு திருச்சி மாநகர ஆணையர் சிவசுப்பிரமணியனிம் 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க கோரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் உமாநாத், மாவட்ட தலைவர் வினோத், கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் உட்பட கலந்து பலர் கொண்டனர்.