![](admin/uploads/.5e8ddcfdb24f63.51829302.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரியலூர் : நகராட்சி அலுவலகத்தில் இடஒதுக்கீடு கேட்டு பாமக சார்பாக மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இதனையொட்டி அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் 5 கட்ட போராட்டம் நடைப்பெற்றது.
மாநில துணை தலைவர் சின்னதுரை தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் ஒற்றுமை திடலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அரியலூர் நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகரிடம் மனு அளிக்கபட்டது. இதில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்ககோரி வலியுறுத்தபட்டுள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்ட பாமவினர் கலந்து கொண்டனர்.