![](admin/uploads/.5d23022d6e6540.19433875.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே சமையல் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர்
நாகர்கோவில் வடசேரி அறுகுவிளையை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மனைவி கவிதா. வீட்டில் சமையல் செய்வதற்காக சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து அடுப்பை பற்ற வைத்தபோது திடீரென சமையல் அறையில் தீ பிடித்துள்ளது.
இதில் வீட்டில் இருந்த கவிதா சாமிக்கண்ணு மற்றும் அவர்களது மகள்களான சந்திரா, கன்சிகா ஆகியோர் உடலில் தீ பிடித்தது காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியினர் நால்வரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்போது நால்வருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவிதா ஏற்கனவே சமையல் செய்த பின் சிலிண்டரை மூடிய போது சரியாக மூடவில்லை என தெரிகிறது.
இதனால் எரிவாயு கசிந்து சமயலறையில் எரிவாயு பரவி இருந்ததால் கவிதா அடுப்பை பற்ற வைத்தபோது எரிவாயு தீப்பிடித்து விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.