Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் -  மணப்பாறை எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகர் வழங்கினார் 

ஜனவரி 07, 2021 01:29

திருச்சி : மணப்பாறையில் 32 பள்ளிகளை சேர்ந்த 3389 மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்.எல்.ஏ ஆர்.சந்திரசேகர்  வழங்கினார்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கோவில்பட்டி சாலையில் அமைந்திருக்கும் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் இன்று பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதில் அரசு மேல்நிலைப்பள்ளி, தியாகேசர் ஆலை, புனித அந்திரேயா, புனித அந்தோணியார், சமேரியா மற்றும் சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி  பெறும் பள்ளிகள் என 32 பள்ளிகளை சேர்ந்த 3389 மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் வழங்கினார். 


விழாவிற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினரை ரோஜா மலர்கள் கொடுத்து இயந்திர மனிதன் வரவேற்றான். அப்போது பேசிய எம்.எல்.ஏ சந்திரசேகர், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வி சேவையில் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிகணிணி போன்ற அரிய பல நலத் திட்டங்களை வழங்கியவர் எனவும், அம்மாவின்  அரசான எடப்பாடியார் அரசு அதை இன்னமும் செம்மையாக மாணவ மாணவியர்கள் பயனுறும் வகையில் செய்து வருகிறது என புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர்  ஆர்.அறிவழகன், மணப்பாறை மாவட்ட கல்வி அலுவலர் பி.ஜெகநாதன், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர்  கலந்துகொண்டனர். தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எல்.அருளரசன் வரவேற்புரையும், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பா.செல்வராஜ் நன்றியுரையும் கூறினர்.

தலைப்புச்செய்திகள்