![](admin/uploads/.5c76229da4afc3.66676661.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தேனி : உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டி முல்லைப் பெரியாற்று பகுதியில் நீரில் மூழ்கி ஐந்து நாட்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டி ரெட்டைபுளித்தெரு பகுதியைச்சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் கேரள மாநிலத்தில் முடி திருத்தும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது சொந்த ஊரான க.புதுப்பட்டி பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு கடந்த ஒன்றாம் தேதி வந்துள்ளார். பின்னர் ஜெயபிரகாஷ் இரண்டாம் தேதி காலை
புதுப்பட்டி கிழக்கு பக்கம் உள்ள முல்லைப் பெரியாறு யானை கஜம் பகுதியில் குளிக்கச் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து அவரது உறவினர்கள் ஜெயபிரகாஷை முல்லைப் பெரியாறு பகுதியில் பல்வேறு இடங்களிலும் தேடியம் கிடைக்காத காரணத்தினால் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரைத் தொடர்ந்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜெயப்பிரகாஷை தேடி வந்தனர். இந்நிலையில் உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் பொது மயானத்திற்கு அருகே முல்லைப் பெரியாற்றின் கரையோரம் வாலிபரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது.
இதை அப்பகுதியில் விவசாய பணிகளுக்கு சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு உடனடியாக உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து வந்த உத்தமபாளையம் காவல்துறையினர் கரை ஒதுங்கிய சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் முல்லைப் பெரியாற்றின் கரையோரம் கரை ஒதுங்கிய சடலம் ஐந்து நாட்களுக்கு முன்பாக புதுப்பட்டி பகுதியில் குளிக்கச் சென்று மாயமான ஜெயப்பிரகாஷின் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இறந்த ஜெயப்பிரகாஷின் உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கைப்பற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உத்தமபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.