Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சாவூர் திருப்பாலத்துறையில் பழமையான நெற்களஞ்சியம் - யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்க கோரிக்கை

ஜனவரி 08, 2021 10:22

தஞ்சாவூர் :  திருப்பாலத்துறையில் பல நூற்றாண்டுகள் பழமையான நெற்களஞ்சியம் குறித்த செய்தி தொகுப்பு. தஞ்சாவூர் மாவட்டம்  திருப்பாலத்துறையில் பல நூற்றாண்டுகள் பழமையான தானிய களஞ்சியம் உள்ளது. கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் திருப்பாலத்துறையில் சோழர் கால பாலைவனநாதர் சிவன் கோயில் உள்ளது.

நாயக்க மன்னர்களின் காலத்தில் ரகுநாத நாயக்கரின் ஆசிரியரும் முதல்வருமான கோவிந்த தீட்சிதர்  மற்றும் அவரது தந்தை அச்சுதப்ப நாயக்கரால் இக்கோவிலில் தானிய களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. ரகுநாத நாயக்கர் 1600 மற்றும் 1634க்கு இடையில் தஞ்சாவூரை ஆட்சி செய்தார்.

கோவிலின் நுழைவாயிலுக்கு அருகில்,வயல்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை சேமிக்க தானிய களஞ்சியம் பயன்படுத்தப்பட்டது. வட்ட செங்கல் அமைப்பு 36 அடி உயரமும், 80 அடி அகலமும் கொண்டது. இக்களஞ்சியத்தின் அடிப்பகுதி வட்டவடிவிலும் மேல்பகுதி கூம்பு வடிவிலும் அமைந்துள்ளது. மேல்பகுதி, நடுப்பகுதி மற்றும் கீழ்பகுதியில் மூன்று திறப்புகளை கொண்டுள்ளது. இதில் தோராயமாக 3000 கலம்

தானியத்தை சேமிக்க முடியும். தொல்பொருள்துறை சமீபத்தில் இக்களஞ்சியத்தை புதுப்பித்து வேலி அமைத்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது தொல்லியல்துறை பழமையான  இக்களஞ்சியத்தை பாரம்பரிய சின்னங்களாக அறிவித்து யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்